விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகர் வெட்டிக் கொலை - இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெறிச் செயல்
Nov 25 2022 7:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பியாம்புலியூரைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர் பாமக மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவர் நேற்று இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஆதித்யன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.