ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டார் ஆளுநர் - சட்ட மசோதாவின் காலம் நவம்பர் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசுக்கு கடிதம்
Nov 25 2022 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலம் வரும் 27ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதா தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.