தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அதிக வட்டி தருவதாக கூறி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கு - ஆரூத்ரா கோல்டு, எல்என்எஸ் இன்டர்நேஷனல், ஹிஜாவு நிறுவனங்களை சேர்ந்த 7 பேர் கைது
Nov 25 2022 8:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடம் பெறப்படும் முதலீட்டுக்கு மாத வட்டி 10 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வழங்குவதாக கூறி மோசடி செய்துள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆரூத்ரா கோல்டு, எல்என்எஸ் இன்டர்நேஷனல், ஹிஜாவு ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.