கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி - நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Nov 25 2022 8:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப் போல~தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது என்றும் நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில், நீதிமன்றம் தானாக முன்வந்து சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.