பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரை நியமிக்க காலக்கெடு ஏதுமில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல்

Nov 25 2022 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக சுயநலமற்று பணியாற்றுபவர்களை கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரை நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரை நியமிக்க காலக்கெடு ஏதும் வகுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. பா.ம.க செய்தி தொடர்பாளர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனு மீது விளக்கமளிக்க கடந்த அமர்வில் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.. கடந்த 9 மாதங்களாக பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00