புதுக்கோட்டை அருகே சொத்து தகராறால் ஏற்பட்ட பயங்கரம் : சொத்துக்காக மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன் கைது
Nov 26 2022 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சைவராஜ். இவரது மருமகன் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது வடுகபட்டியில் வசித்து வருகிறார். மாமனருக்கும் மருமகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மருமகன் ரவிச்சந்திரன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது மாமனாரை சுட்டார். இதில், மாமனார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கந்தர் கோட்டை காவல்துறையினர், ரவிச்சந்திரனை கைது செய்தனர்.