தேனியில் சாலைகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம் : உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Nov 26 2022 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டத்தில் உள்ள தெருக்களில் கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் வீட்டு கழிவுகளை தின்பதற்காக ஒன்று சேரும் நாய்கள், சாலைகளில் சண்டையிட்டு கொள்கின்றன. இதனால், இருசக்கர வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.