அருப்புக்கோட்டையில் பழி தீர்க்‍க நடத்தப்பட்ட இரட்டைக்‍கொலை : நீதிபதி முன்பு சரணடைந்த 3 பேர் சிறையில் அடைப்பு

Nov 26 2022 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அருப்புக்கோட்டை இரட்டை கொலை சம்பவத்தில் சரணடைந்த 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உடையனம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராக்கம்மாள் கொலை வழக்கில் தொடர்புடைய சபரிமலை என்பவர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார்.

நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சபரிமலை மற்றும் ரத்தினவேல்பாண்டியன் ஆகிய இருவரின் உடல்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளன. இந்த இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதில் தொடர்புடையதாக கூறி முகேஷ்குமார், ஜெயக்குமார், சூர்ய பிரகாஷ் ஆகிய 3 பேரும் மதுரை மாவட்ட 6ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி திரு.சந்தானக்குமார் முன்பாக சரணடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அம்மூவரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00