செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து காணப்பட்ட பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
Nov 26 2022 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் வழக்கத்துக்கு மாறாக பனிமூட்டம் காணப்பட்டது. மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக காட்சியளித்ததால்,வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனர். பொதுமக்களும் வெளியே வரமுடியாமல் அவதியுற்றனர். வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்ட இந்த பனி மூட்டத்தால், கால்நடைகளை நோய் தாக்கும் என்றும், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.