ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்‍குதல் : படகை சேதப்படுத்தியதால் நடுக்‍கடலில் தத்தளிப்பு - சக மீனவர்களால் மீட்பு

Nov 26 2022 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநதாபுரம் மாவட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியது. இதில் நாட்டுப் படகு பலத்த சேதம் அடைந்தது.

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்திலிருந்து அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நான்கு மீனவர்கள் வழக்கம் போல் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியாக வந்த இலங்கை கடற்படையின் ரோந்து படகு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்த படகு மீது மோதியது. இதில் அந்தோணி அடிமையின் நாட்டுபடகு சேதமடைந்ததால் கடல் நீர் படகுக்குள் புகுந்தது. பின்னர் அப்படகு தண்ணீரில் மூழ்கியது. இதனை தொடர்ந்து மற்ற மீனவர்கள் அந்த படகை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் அப்படகு மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகியது. இந்திய கடல் எல்லை பகுதியிலேயே நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படையினர் மோதிய அராஜக செயல் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00