ஈரோடு: சாலையில் ஊர்ந்து சென்ற 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு மக்கள் அச்சம் - வனத்துறையினர் மீட்பு
Nov 26 2022 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சாலையில் ஊர்ந்து வந்த மலைப்பாம்பை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னன்புரம் சாலையில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.