மீண்டும் களைகட்டும் திற்பரப்பு அருவி : வார விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் குவிந்த பொதுமக்கள்

Nov 26 2022 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வார விடுமுறையையொட்டி இன்று கூட்டம் அலைமோதுகிறது.

தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது மழை முடிந்து வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அங்கு நீராடுவதற்கு அங்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்த வண்ணம் உள்ளனர். அருவியில் நீண்ட நேரம் குளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இதனால் திற்பரப்பு அருவி களை கட்டி உள்ளது. நாளை ஞாயிறு என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00