திருசெந்தூர் தருமபுர ஆதீன மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் - உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Dec 7 2022 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருசெந்தூர் தருமபுர ஆதீன மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்செந்தூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கையை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவ்வாறு மீட்கப்படும் நிலங்களை தருமபுர ஆதீன மடத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இதனை 12 வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.