தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே சிறிய குளம் நிரம்பியதால் மாறுகால் வசதி இன்றி 50 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின
Dec 7 2022 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாமு நைனார்புரம் கிராமத்தில் பெய்த மழையால், சிறிய குளம் நிரம்பியதால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. சிறிய குளத்தில் இருந்து மழைநீர் வெளியே செல்ல, மாறு கால் வசதி இல்லாததால் விளை நிலங்களில் முழுவதுமாக மழை நீர் தேங்கின. இதனால் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களுக்கு முழங்கால் அளவு தண்ணீரில் மிதந்தபடியே விவசாயிகள் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.