தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
Dec 7 2022 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், இன்று மாலை உருவாகும் புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என தெரிவித்தார். இதன் காரணமாக நாளை முதல் வரும் 10 ஆம் தேதிவரை தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, டிசம்பர் 10 ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.