தமிழகத்தில் அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடக்கம் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல்
Dec 7 2022 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"ஸ்டார்ட் அப்" திட்டத்தின் கீழ், தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் இன்று, எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டில் 602 நிறுவனங்கள், 2020ம் ஆண்டில் 755 நிறுவனங்கள், 2021ம் ஆண்டில் ஆயிரத்து 103 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.