கன்னியாகுமரி: திங்கள்நகர் நவீன மீன்சந்தை கட்டுமான பணிகளில் முறைகேடு - காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்-ஐ முற்றுகையிட்டு வாக்குவாதம்
Dec 7 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1 புள்ளி 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை கட்டுமான பணிகளில் ஊழல் நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்-ஐ முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்நகர் சந்தை நவீன மீன் சந்தையை இன்று அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். இதற்காக அங்க வந்த குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்-ஐ இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த வாக்குவாதம் கோஷ்டி மோதலாக வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.