நடிகை பார்வதி நாயரை மிரட்டியவர் கைது : புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை

Dec 7 2022 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை வெளியிட்டு இழிவுபடுத்தி, மிரட்டி வருவதாக அளிக்கப்பட்ட புகாரில், அவரது முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திரபோஸ், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் பணிபுரிந்து வந்த சுபாஷ் சந்திரபோஸ், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம், லேப்டாப், கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றை திருடிவிட்டதாக சந்தேகிப்பதாகவும், அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் நடிகை பார்வதி நாயர், கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் மிரட்டல் விடுப்பதாக, கடந்த வாரம், காவல் ஆணையர் அலுவலகத்தில் பார்வதி நாயர் மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசார், புதுக்கோட்டையில் இன்று, சுபாஷ் சந்திரபோசை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00