வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு
Dec 7 2022 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் மார்க்கமாக ரயில் செல்லும் தடத்தில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பிரந்தாவன் விரைவு ரயில் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.