ஈரோடு: 10 மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை - அதிகாரிகளுடன் திமுக பெண் கவுன்சிலர் வாக்குவாதம்
Dec 7 2022 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
10 மாதங்களாகியும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை என்றும், மக்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை எனவும் பவானி திமுக பெண் கவுன்சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் 7 வார்டு திமுக கவுன்சிலர் சாரதா, தாங்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இதுவரை குடிநீர் இணைப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் வசூல் செய்த போதும், இணைப்பு கொடுக்கவில்லை என கூறி அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.