தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் - தயார் நிலையில் மீட்புப் படையினர்
Dec 7 2022 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தஞ்சை வந்தடைந்தனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏ.கே.சுக்லா தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அரக்கோணத்தில் இருந்து தஞ்சாவூர் வந்தனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.