கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு
Dec 7 2022 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப் சிலிப், அமராவதி உள்ளிட்ட வனச் சரகங்களில் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளின் எச்சம், கால்தடம் போன்றவற்றைக் கொண்டு விலங்குகள் கணக்கெடுக்கப்படும் என வனக்காப்பாளர்கள் தெரிவித்தனர்.