கடலூர் மாவட்டத்தில் மோசமான வானிலை - மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
Dec 7 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், மோசமான வானிலை நிலவும் எனவும், மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், கடற்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக, 49 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.