மயிலாடுதுறை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம் - மின்விளக்குகள் அகற்றம்
Dec 7 2022 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான தரங்கம்பாடியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து, உயர் மின்விளக்கு கோபுரங்களில் இருந்து விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று, மீன்வளத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைக்கு நாளை முதல் செல்ல வேண்டாம் என்று, பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.