சிவகங்கை: ஆக்கிரமிப்பை அகற்றினால் அடிப்பேன் - தி.மு.க.வைச் சேர்ந்தவர் மிரட்டல் - சமூக வலைதளங்களில் உலா வரும் வீடியோ
Dec 7 2022 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கையில், ஆக்கிரமிப்பை அகற்ற வந்த நகராட்சி ஊழியரை, தி.மு.க.வைச் சேர்ந்தவர் மிரட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்தில், நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை, நகராட்சி ஊழியர் அப்புறப்படுத்த முயற்சித்தார். அப்போது, தி.மு.க.வைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர், தனது பொருட்களை யார் வந்து எடுத்தாலும் அவர்களை அடிப்பேன் என்று நகராட்சி அதிகாரிகளை ஒருமையில் பேசியுள்ளார். இந்த மிரட்டல் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.