கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மேலும் முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய மூவரும் கைது
Dec 7 2022 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. விசாரணையில் இது சதிச் செயல் என உறுதியாகியது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி ஏற்கனவே 6 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை கைது செய்து என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.