நெல்லை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் சைலேந்திரபாபு சந்திப்பு - சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடை குறித்து டிஜிபி ஆலோசனை
Dec 7 2022 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன், தமிழக டிஜிபி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழக டிஜிபி திரு.சைலேந்திர பாபு, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் நெல்லை பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு, நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் திரு.அபினேஷ் குமார், துணை ஆணையர் திரு.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டம் ஒழுங்கு குறித்தும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.