சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல்... மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்
Dec 9 2022 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் மாண்டஸ் புயல் புயலாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் என கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல் தலைவர் பாலச்சந்திரன், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக தெரிவித்தார்.
புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது 65 லிருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக அரபிக்கடலை நோக்கி செல்லும் ACCU Weather சர்வதேச வானிலை இணையதளம் கணித்துள்ளது.