கோவை: குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்
Jan 24 2023 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் தாலியூர் கிராமங்களில், காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சோமயம்பாளையம், ஆனைகட்டி, பொன்னூத்து, வரப்பாளையம், தாலியூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, சோளம், வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தின.