திருவள்ளூர்: பொன்னேரி அருகே மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - தீயில் கருகிய 3 குடிசை வீடுகள்
Jan 24 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, 3 குடிசை வீடுகள் தீயில் கருகின. குன்னமஞ்சேரியில் திருநங்கைகள் குடியிருக்கும் குடிசை வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீ மளமளவென அருகில் உள்ள 2 குடிசைகளுக்கும் பரவியது. தீயணைப்புப் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.