விழுப்புரம்: செஞ்சி அருகே ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
Jan 24 2023 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, உமையாளபுரம் பகுதியில், ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து 10-க்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உமையாள்புரம் பகுதியில் பனமலை மலை மீது அமைந்துள்ள தாளகிரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்நிலையில், சாலை ஓரத்தில் உள்ள கடை வாடகை கட்டாததால் அந்தக் கடைக்கு சீல் வைக்க, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வந்த அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.