சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ கருத்துக்களை தெரிவித்த விவகாரம் : இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜராகி சித்த மருத்துவர் ஷர்மிகா விளக்கம்
Jan 24 2023 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ கருத்துகளை தெரிவித்த விவகாரம் தொடர்பாக, சித்த மருத்துவர் ஷர்மிகா, இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜரான அவரிடம் சுமார் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றது. சித்த மருத்துவ முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து ஆய்வாளர் மேனக்ஷா, மருந்து ஆய்வாளர் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து, வரும் 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.