குடியரசு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 1000-க்கும் மேற்பட்ட போலீசார்
Jan 24 2023 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதியில் உள்ள மாநிலங்களில் பாதுகாப்பு பணி தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதம் நடைபெறாத வகையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முக்கியஸ்தலமான ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பாம்பன் பாலம், ரயில் நிலையம், கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் மற்றும் கடலோ காவல் படையினர் தரையிலும், தண்ணீரும் செல்லக்கூடிய ஓவர் கிராப்ட் கப்பல் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.