நெல்லை: உரத் தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர் மழுப்பலான பதில்
Jan 24 2023 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர், மழுப்பலான பதில் அளித்துவிட்டு, அவசர அவசரமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்து தப்பியோடினார். 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் உரத்தட்டுப்பாடு இருப்பதாகவும் உரங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். இதனையடுத்து, உரத் தட்டுப்பாடு குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் திடீரென உரத்திற்கான தனியாக ஆப் உள்ளதாகவும், அதில் சென்று விவசாயிகள் பார்க்க வேண்டும் என்றும் மழுப்பலான பதில் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.