திருவண்ணாமலையில் வீட்டின் ஜன்னலை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Jan 24 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில், வீட்டின் ஜன்னலை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நல்லவன்பாளையம், சர்வேசா கார்டன் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர், தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.