கோவை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும்- திருப்பூர் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பரபரப்பு
Jan 25 2023 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும் என திருமுருகன்பூண்டியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே திருமுருகன்பூண்டி, அவிநாசி சாலை, பெரியாயிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஈஷா யோகா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், சுபஸ்ரீயின் மர்ம மரணம் குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.