ஜி 20 மாநாட்டை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு - வெடிகுண்டு சோதனைகளுக்கு பின்பே வாகனங்களுக்கு அனுமதி
Jan 31 2023 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜி20 மாநாட்டை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தாஜ் கோரமண்டல் கன்னிமாரா நட்சத்திர விடுதியிலும், தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்திலும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடைபெறும் ஜி20 மாநாடு கூட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை விமான நிலைய முனையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.