திண்டுக்கல்லில் மீன்பிடிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : மூன்று நாட்களுக்கு பின் சடலத்தை மீட்டு உடற்கூர் ஆய்வுக்கு அனுப்பிய போலீசார்
Jan 31 2023 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் மீன் பிடிக்க சென்று தண்ணீரில் மூழ்கி பலியான பள்ளி மாணவனின் சடலம் மூன்று நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டது. பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த வேல்முருகனின் மகன் வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக நண்பர்களுடன் நந்தவனப்பட்டி கல்குவாரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது, நீரில் தவறி விழுந்த வருண் நீச்சல் தெரியாததால் பரிதாபமாக உயிரிழக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் தேடியும் சடலம் கிடைக்காததால் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை வருணின் சடலம் நீரில் மிதக்கும் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.