நெல்லை மாநகர பகுதிகளில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரம்
Jan 31 2023 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாநகர பகுதிகளில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பேருந்துகளில் சென்ற இரண்டு பெண்களிடம் அடுத்தடுத்து தங்க செயின் பறிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று குல வணிகர் புரத்தில் நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் தேவிகாவிடம் பத்து பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தச்சநல்லூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்கும் போது அப்பெண் சுதாரித்துக் கொண்டதால் செயினை பறிக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், செயின் பறிப்பு கொள்ளையை தடுக்கும் வகையில் நெல்லை மாநகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.