தஞ்சாவூர்: பள்ளி மாணவர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் எச்சரிக்கை
Jan 31 2023 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பள்ளிக்கு வரும் குழந்தைகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்தினால் அவர்கள் யாராக இருந்தாலும் துறைரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக்கூடம் என்பது குழந்தைகள் படிக்க வரும் இடம் என்றும், அங்கு குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே சொல்லித் தர வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை தவிர்த்து மாணவர்களை வேறு பணிக்கு பயன்படுத்தினால், அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அப்போது எச்சரித்தார்.