நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
Jan 31 2023 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் பிரச்னை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்களான துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுப்பிரமணியன் தரப்பினரை மிரட்டியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திமுக நிர்வாகி சுப்பிரமணியனை, எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தாக்க முயற்சித்தால் மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.