மயிலாடுதுறை: குறைதீர்க்கும் கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விவசாயிகள் - மாவட்ட ஆட்சியர் முன்பாக நடைபெற்றதால் பரபரப்பு
Jan 31 2023 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இரு விவசாயிகள் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்தக் குறைதீர்க்கும் கூட்டத்தில், சீர்காழி தாலுகா வேட்டங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி, தன்னுடைய பிரச்சனைகள் குறித்து கூற வந்த நிலையில், பொதுவான பிரச்னைகள் பற்றி தான் பேச வேண்டும் என்று மாப்படுகையைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி கூறியதால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.