காகித கோப்பைகளால் மிகப்பெரிய தேசியக் கொடியை உருவாக்கி உலக சாதனை
Mar 6 2023 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், திருச்சி காஜாமலை அல்ஜமீத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து காகித கோப்பைகளால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியினை உருவாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பச்சை, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் அசோகச் சக்கரத்தின் நீல வர்ணம் என நான்கு வண்ணங்களில் 33 ஆயிரத்து 100 பேப்பர் கப்புகளை, 337 புள்ளி 5 சதுர மீட்டர் பரப்பளவில் அடுக்கி வைத்து மிகப் பிரமாண்டமான அளவில் தேசியக்கொடியினை உருவாக்கி சாதனை நிகழ்த்தினர். இதன்மூலம் கடந்த 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதனையை முறியடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.