ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல் விமானம் மூலம் மதுரை வருகை : விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை - சொந்த ஊரில் இன்று இறுதிச்சடங்கு
Mar 18 2023 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அருணாச்சலப்பிரசேத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல் மதுரை கொண்டு வரப்பட்டு சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், அருணாச்சலப்பிரசேத்தின் பாம்பிலா பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த 33 வயதான மேஜர் ஜெயந்த் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல், விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு, அவருக்கு தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்தின் உடலானது அவரின் சொந்த ஊரான தேனி ஜெயமங்கலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.