சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக பெய்த மழை : தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
Mar 18 2023 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் மழை பெய்தது. கடந்த சிலநாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், 2வது நாளாக இன்றும் எழும்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து, மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.