தருமபுரி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட 5 மாணவிகள் மயக்கம் : மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை
Mar 18 2023 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 5 மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது 6ஆம் வகுப்பு மாணவிகள் சிலர், தங்களது வகுப்பறையில் ஆசிரியரின் மேஜையில் இருந்த சத்து மாத்திரையை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில், சர்மிளா, தேகா, அஷிதா, ஷாலினி மற்றும் ஷிபிநயா ஆகிய மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவிகளை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து, பெற்றொர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.