தேனி மக்களவை தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான எம்.பி. ரவீந்திரநாத்
Mar 18 2023 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மக்களவை தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தொகுதி எம்.பி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். வேட்புமனுவில் சொத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால், அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து வந்த நிலையில் தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.