அரியலூர் அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி : காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள்
Mar 18 2023 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.