சென்னை புழல் சிறையில் கைதியை பார்க்க வந்த போலி வழக்கறிஞரை கைது செய்த சிறை அதிகாரிகள் : சந்தேகத்தின் பேரில் ஐ.டி.கார்டை சோதித்த போது போலி என தெரியவந்தது

Mar 18 2023 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை புழல் சிறையில் கைதியை பார்க்க வந்த போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்குமார் என்பவரை பார்க்க சென்னை மதுரவாயலை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். தன்னை வழக்கறிஞர் என ராஜ்குமார் அறிமுகப்படுத்தி கொள்ள, சிறை அதிகாரிகளும் சிறைக்குள் சதீஷ்குமாரை பார்க்க அனுமதித்தனர். சதீஷ்குமாரை பார்த்துவிட்டு திரும்பிய ராஜ்குமாரிடம் வழக்கறிஞர் ஐ.டி.கார்டை காண்பிக்குமாறு காவலர் ஒருவர் கேட்க, ராஜ்குமார் ஐ.டி. கார்டை எடுத்து நீட்டியுள்ளார். அதை உயர்நீதிமன்ற இணையதளத்தில் பரிசீலனை செய்து பார்த்த போது அது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் ஏற்கனவே அவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்குமாரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00