திருப்பூரில் மேலதிகாரிக்கு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த வீடியோ வைரல் : ஆர்.ஐ.யின் செயலை கண்டித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை
Mar 18 2023 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட வருவாய் ஆய்வாளர் மீது ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரத்தில் டவுன் ஆர்.ஐ. ஆக தனலட்சுமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பொதுமக்களை பல மணி நேரம் கால் கடுக்க நிற்க வைத்து விட்டு தனது மேல் அதிகாரிக்காக மட்டன் பிரியாணி, ஒயிட் ரைஸ் போன்றவற்றை நல்லம்மாள் கிராமிய சமையல் கடையில் ஆர்டர் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.